வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் : பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய கல்லூரி மாணவர்களின் சாதனை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி, ஐந்து மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் பெறுபேறுகள்
8Aஇற்கு மேற்பட்ட சித்திகளை 10 மாணவர்கள் பெற்றுள்ளதுடன், மேலும் பலர் சிறந்த சித்திகளைப் பெற்று உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கே.சாருண்யா, எஸ். ஸ்ரீவித்யா, எம். விக்சான், எஸ். டிலோசன், எல். தாருக்ஸன் உள்ளிட்ட மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதேவேளை, கொட்டகல ஷ்டொனிக்ளிப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, 7Aஇற்கு மேற்பட்ட சித்தியை கபிலாஞ்சலி என்ற மாணவியும், 6Aஇற்கு மேற்பட்ட சித்தியை திவக்சன் என்ற மாணவனும் பெற்றுள்ளனர். மேலும், கணிதப் பாடத்தில் 64 சதவீத சித்தியை குறித்த பாடசாலை பதிவு செய்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam