ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் ஆற்றல் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டியதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய அளவுகோலாகக் கருதப்படும் பிரென்ட் கச்சா விலை 1.4% உயர்ந்து 110.60 அமெரிக்க டொலராக உயர்ந்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.8% உயர்ந்து $113.60 ஆக உயர்ந்துள்ளது.
இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு
கடுமையான வார்த்தை
ஈரானில் செவ்வாய்க்கிழமை, மின் உற்பத்தி நிலைய தினமும், நரக தினமும் ஒரே நாளில் கொண்டாடப்படவுள்ளது. இதைப்போல் வேறு எதுவும் இருக்காது என்று கடுமையான வார்த்தைகளில் ட்ரம்ப் எச்சரித்தார்.
அதன்பின், சில மணி நேரங்களில், அவர் புதிய காலக்கெடு ஒன்றையும் அறிவித்தார். செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி (Eastern Time)! என்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சமூக ஊடகத்தில் பதிவு செய்தார்.

இதற்கு பதிலளித்த ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கப்படும் வரை அந்த நீரிணை மீண்டும் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மார்ச் 21 அன்று ட்ரம்ப், ஈரானுக்கு இரண்டு நாள் காலக்கெடு வழங்கியிருந்தார். ஆனால் பின்னர் அந்த காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை நீட்டித்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்காவிற்கு அவசியமில்லை என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த மிரட்டல் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA
நெதன்யாகுவின் அழுத்தத்தில் செயல்படும் ட்ரம்ப் - பேரழிவை நோக்கி செல்லும் வளைகுடா! ஈரான் பகிரங்க எச்சரிக்கை