24 மணிநேரத்தில் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த 15 கப்பல்கள்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில், ஹோர்மூஸ் நீரிணை வழியாக 15 கப்பல்கள் “ஈரானின் அனுமதியுடன்” கடந்து சென்றதாக Fars News Agency (ஈரானின் Islamic Revolutionary Guard Corps-க்கு இணைந்த செய்தி நிறுவனம்) தெரிவித்துள்ளது.
ஆனால், போர் தொடங்குவதற்கு முன் இருந்த நிலையை ஒப்பிடும்போது, கப்பல் போக்குவரத்து இன்னும் 90% குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை
ஈரான் அதிகாரிகளில் சிலர், குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி, இந்த முக்கியமான கடல் வழி முழுமையாக மூடப்படவில்லை என்றும், அது “எதிரி நாடுகளுக்கு மட்டும்” மூடப்பட்டுள்ளது என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, நேற்று, ஈரான் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து ஈராக் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, Khatam al-Anbiya Central Headquarters-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு பயணக் கட்டணம் அல்லது சுங்கம் விதிக்கும் வாய்ப்பையும் முன்வைத்துள்ளனர்.
முன்னதாக, ஈரான் ஜனாதிபதி அலுவலக உதவியாளர் ஒருவர், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக, கடந்து செல்லும் கப்பல்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் போது மட்டுமே ஹோர்மூஸ் நீரிணை “மீண்டும் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் அழுத்தத்தில் செயல்படும் ட்ரம்ப் - பேரழிவை நோக்கி செல்லும் வளைகுடா! ஈரான் பகிரங்க எச்சரிக்கை