வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்
2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் தவறாக வழிநடத்தியதாக கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் முன்னிலையில் நேற்று மதியம் சாட்சியமளிக்கும் போது டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தங்கள் வாகனத்தின் மீது மூன்றாம் தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியில் விளம்பரப்படுத்துமாறு தங்களிடம் கேட்கப்பட்டது.
தவறான வழிநடத்தல்
இருப்பினும், அந்தத் துப்பாக்கி பிரயோகம், வெலிகம பொலிஸாராலேயே மேற்கொள்ளப்பட்டதாக அன்செல்ம் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனர் தன்னையும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் தவறாக வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam