யாழ்.மாநகரசபை முதல்வர் தலைமையில் அதிகாரிகள் குழு விசேட களவிஜயம்
யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையிலான மாநகரசபை துறைசார் அதிகாரிகள் குழு இன்று (09.02.2023) விசேட களவிஜயம் ஒன்றை யாழ்ப்பாணம் நகர்ப்புறத்திற்கு மேற்கொண்டிருந்தனர்.
நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மாநகர சிற்றங்காடி, பேருந்து நிலைய கடைத்தொகுதிகள், நவீன சந்தை கட்டிடத்தொகுதியில் உள்ள கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் செயற்பாடுகள், நடைபாதைக்கு தடையாகவுள்ள விற்பனைகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி நடைபாதைக்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிலைமைகள்
மேலும் அங்காடியில் உள்ள சுகாதார நிலைமைகள் தொடர்பில் ஆராயந்து அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று வியாபார நிலையங்களை நடாத்தி வருபவர்கள் நடைபாதை போக்குவரத்திற்கு இடையூறு இன்றி தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று உடனடி அறிவித்தல்களை உரிய கடை நடாத்துனர்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக நவீன சந்தை கட்டடத்தொகுதியில் உள்ள கடைகள் சுகாதார மற்றும் நடைபாதை போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறாக மேற்கொள்ளும் விற்பனைகளை தவிர்ப்பதற்கான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
அறிக்கையிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு
குறித்த விடயங்களை அவதானித்து உரிய முறையில் அறிக்கையிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நகர்ப்புறம், நவீன சந்தை கட்டடத்தொகுதியோடு அமையப்பெற்றுள்ள மலசலகூடங்களை முறையாக பராமரிக்காமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு உரிய முறையில் துப்பரவு செய்து பராமரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த களவிஜயத்தில் மாநகர பொறியியலாளர், சுகாதார மேற்பார்வையாளர்கள்,
தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
