நிச்சயமாக கோட்டாபய பதவி விலகிச் செல்ல வேண்டும்: அது ஒன்றே தீர்வு
கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக பதவி விலகி செல்ல வேண்டும். அதன் பின்னரே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகி சென்றதுடன் நாடாளுமன்றத்துக்கு உள்ளே ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டைக்கொண்டு நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முதலாவது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்த பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியிருக்கிறது. தற்போது பாரிய அரசியல் நெருக்கடி காணப்படுகிறது. எனவே அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசியல் தலைமைத்துவம் அவசியமாகும். அதனால் மக்கள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக பதவி விலகி செல்ல வேண்டும். அதன் பின்னரே தற்காலிக தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி பதவி விலகி சென்றதுடன் நாடாளுமன்றத்துக்கு உள்ளே ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டைக்கொண்டு நடத்த முடியும். அல்லது அரசியல் அமைப்புக்கு ஒரு புதிய பிரிவை உட்படுத்தி ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டரை வருடங்களாக குறைக்க முடியும்.
ஜனாதிபதி தனது பதவியை முடித்துக்கொண்டு வெளியேறினால் புதிய ஜனாதிபதியை தேர்தலில் தெரிவு செய்யலாம். அத்துடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு பல சந்தர்ப்பங்கள், மாற்று வழிகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri