முடக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி
கோவிட் நோய்த் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
உணவு, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தாங்கிய விநியோக வண்டிகள் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவிட் மூன்றாம் அலை தொடர்பில் சுகாதார தரப்பினர் உன்னிப்பதாக அவதானித்து வருவதாகவும் வேகமாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை வரையில் 13 மாவட்டங்களில் 90 பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.