நாட்டு மக்களின் உடற் பருமனில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் உடற் பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டில் 46.1 வீதமான பெண்களும், 30 வீதமான ஆண்களும் அதிக உடல் எடையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொற்றா நோய்கள்
தேசிய நீரிழிவு நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவையும் தொற்றா நோய்கள் தொடர்பிலான ஆபத்துக்களை கண்டறியும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து ஆய்வு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடற் பருமன் அதிகரிப்பு காரணமாக தொற்றா நோய்கள் அதிகளவில் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உடல் எடை அதிகரிப்பு
சிறுவர்கள் மத்தியிலும் உடல் எடை அதிகரிப்பு உயர்வடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மொத்த சனத்தொகையில் 1.9 பில்லியன் பேர் உடற் பருமண் அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 6 மணி நேரம் முன்

வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை News Lankasri
