நுவரெலியா - கம்பளை பிரதான வீதி தற்காலிகமாக மூடல்: பாறைகள் சரிந்து விழும் அபாயம்
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியருகில் அபாயகர நிலையில் இருந்த ஒரு பெரிய பாறை பிரதான மார்க்கத்தில் விழுந்துள்ளது.
இதனுடன், கொத்மலை கெரண்டிஎல்லப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து பல பெரிய பாறைகள் சரிந்து தோட்டப்பகுதிகளில் விழுந்துள்ளன.

போக்குவரத்து சீரமைக்கும் பணிகள்
இதில் மேலும் பிரதான வீதிக்குச் சரிந்து வரக்கூடிய அபாயம் நீடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக வீதி மூடப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கெரண்டிஎல்லப் பிரதேசத்தில் பல இடங்களில் மண் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளன.
தற்போது அவை அகற்றப்பட்டு வீதி போக்குவரத்து சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதி மீண்டும் திறக்கப்படும் வரை வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri