ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி நுவான் துஷார நீதிமன்றத்தில் வழக்கு
2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடையின்மைச் சான்றிதழ் வழங்க மறுப்பதாகத் தெரிவித்து, வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
நிர்ணயிக்கப்பட்ட உடல் தகுதித் தரநிலை
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸாநாயக்க, பொருளாளர் சுஜீவ முதலியப்ப மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
2026 ஐபிஎல் தொடருக்காக ரோயல் சேலஞ்சர்ஸ் (Royal Challengers) அணியால் நுவான் துஷார தெரிவு செய்யப்பட்டுர்.

அவர் இதற்கு முன்னர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியுடன் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் 2026 மார்ச் 31 உடன் முடிவடைவதாகவும், அதனைப் புதுப்பிக்கப் போவதில்லை என்றும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாகவும் அவர் ஏற்கனவே சபைக்கு அறிவித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட உடல் தகுதித் தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி அவருக்கு NOC வழங்க இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது. ஆனால், தனது தற்போதைய உடல் தகுதி மட்டம் தனது முழு வாழ்க்கையிலும் பேணப்பட்ட அதே மட்டத்திலேயே இருப்பதாகவும், முன்னைய ஆண்டுகளில் இது தடையாக இருக்கவில்லை என்றும் துஷாரா வாதிடுகிறார்.
கிடைக்க வேண்டிய பெரும் வருமானம்
தான் தேசிய அணிக்காகத் தெரிவு செய்யப்பட மாட்டேன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடல் தகுதியைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், ஐபிஎல் நிர்வாகம் தனக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை நியமிக்கும் என்றும், இதனால் தனக்குக் கிடைக்க வேண்டிய பெரும் வருமானம் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, தனக்கு தடையின்மைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என அறிவிக்குமாறும், ஐபிஎல் மற்றும் ஏனைய வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால மற்றும் நிரந்தர கட்டளைகளை பிறப்பிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam