நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka SL Protest Hospitals in Sri Lanka Budget 2025
By Laksi Feb 27, 2025 08:15 AM GMT
Report

புதிய இணைப்பு

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,தாதியர்களின் பதவி உயர்வு காலம் நீடிக்கப்பட்டுள்ளமை சுகாதார ஊழியர்களை முழுமையான பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

உரிய நடவடிக்கை

இதன்போது, தாதியர்கள் தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு, குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வை பழைய முறைப்படி வழங்கு, ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

அத்தோடு, அரசாங்காம் இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை நடத்த அரசாங்க தாதியர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் - கஜிந்தன்

கிளிநொச்சி

வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடுபூராகவும் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை,நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்திருந்தது.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

இதற்கமைய நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சில தாதியர்கள் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை குறித்த போராட்டமானது வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிக்குடி

 2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எதுவித பாதிப்புமின்றி தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தை  அவதானிக்க முடிந்தது.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மேலதிக நேர வரம்பு பிரச்சினையை முன்வைத்து இன்று கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவும் தெரிவித்திருந்தார்.

நுவரெலியா

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

குறித்த போராட்டம் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் ,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்று வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று(27) பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் தற்போது முன்மொழியப்பட்டு வாதிடப்பட்டு வரும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாகை

இந்தநிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களினால் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடாத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருந்து தட்டுப்பாடு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,  அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும், சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையினை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும் வேறு அரச ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும், கொடுப்பனவுகள் அதிகரிக்கும் போது பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டமானது இன்று (27)  நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்!

நிறைவுக்கு வந்த கடற்றொழிலாளர்களின் பாரிய போராட்டம்!

கோரிக்கை

அத்துடன், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Nurses Prepare To Strike Nationwide

மேலும், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதென்று தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில் மேலும் ஒரு இலங்கையர் : நீண்டு செல்லும் விசாரணை

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில் மேலும் ஒரு இலங்கையர் : நீண்டு செல்லும் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Dortmund, Germany

29 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், St. Gallen, Switzerland

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, துணுக்காய், சென்னை, India

05 Dec, 2025
மரண அறிவித்தல்

கைதடி தெற்கு, கொழும்பு

04 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், London, United Kingdom

08 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ் ஓட்டுமடம், கிளிநொச்சி, Brampton, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, மாதகல், முத்தையன்கட்டு, Markham, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
மரண அறிவித்தல்

அல்வாய், Montreal, Canada, Toronto, Canada, Vancouver, Canada

30 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, வெள்ளவத்தை

04 Dec, 2025
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, வெள்ளவத்தை, மாதகல்

05 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், நோர்வே, Norway

05 Dec, 2015
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
மரண அறிவித்தல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Scarborough, Canada

01 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US