இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரிப்பு - செய்திகளின் தொகுப்பு
2022 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று ஆரம்பமாவதற்கு முன் வருடாந்தம் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பை காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2022 அக்டோபர் மாதத்தில் 28,473 பேர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,