நாட்டில் தொடர்ச்சியாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 ஐ தாண்டியுள்ளது
ஒரே நாளில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் - 19 நோய்த்தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று நாட்டில் பதிவான மொத்த கோவிட் -19 நோய்த்தொற்றாளிகளின் எண்ணிக்கை 963 ஆகும். அவற்றில் 940 பேர் பேலியஹொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்
சிறைச்சாலை கொத்தணியில் 15 பேரும் ஐக்கிய அரபு இராட்சியத்திலிருந்து வருகை தந்த எட்டு பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 72,174 ஆகவும், சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,644 ஆகவும் உள்ளது.
இதுவரை 6,155 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் மொத்த கோவிட - 19 இறப்புகளின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன உறுதிப்படுத்தினார்.
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam