புதிய சபாநாயகர் குறித்து தேசிய மக்கள் சக்தியின் தீர்மானம்!
புதிய இணைப்பு
10ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரங்வல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், முதலாவதாக சபாநாயகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
சபாநாயகராக அசோக சபுமல் ரங்வல்லவை நியமிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வலவை நியமிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வுகள் இன்று (21) நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வின் போது சபாநாயகர் தெரிவு முதலில் இடம்பெறவுள்ளது.
27 பிரதி அமைச்சர்கள்
இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவின் பின்னர், பிரதி அமைச்சர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சுமார் 27 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri