ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்த கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜூன் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றிற்கு தெரிவாகிய ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் ஒழுங்கமைப்புத் துறையின் துணை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.
இந்த பதவி விலகல் நாடாளுமன்ற செயலாளர் குஷாணி ரோஹணதீரவால் ஏற்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது இடத்திற்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹர்ஷண சூரியப்பெரும இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இம்மாத இறுதியில் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
