பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதல் அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவசர விசாரணைகள்
இதேவேளை பல்வேறு காரணங்களுக்காகப் பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து அவசர விசாரணைகள் நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள கல்வி சீர்திருத்தத்தில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், மனித வளங்களை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டை நடத்துதல் ஆகியவை அடங்கும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri