இலங்கை வங்கி ஊழியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக அரச வங்கி நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிராம மக்களுக்கு சேவை
‘‘தற்போதைய அரச வங்கிச் சட்டம் நீக்கப்படும்.
இந்த ஆறு வங்கிகளில் உலகின் முப்பது பெரிய அரச வங்கிகளில் இரண்டு வங்கிகளும் உள்ளன.
அரச வங்கிகள் இலாப நோக்குடன் நிறுவப்படவில்லை, மாறாக அவை, தொலைதூர கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவப்பட்டது.
இந்த விடயத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து பாரிய தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை காற்றில் பறக்க விட்ட இஸ்ரேல்! காசா முற்றுகைக்கு எதிராக திரண்ட 21 நாடுகள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
