பொய்யான தகவல்களை நம்பவேண்டாம்: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு
சில பெருந்தோட்ட முதலீட்டு நிறுவனங்கள் தமது நிறுவனம் இலங்கை மத்திய வங்கியினால் கணக்காய்வு செய்யப்படும் என சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of SriLanka) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி (Central Bank of SriLanka) குறிப்பிட்டுள்ளது.
எனவே குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வங்கியின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண பரிவர்த்தனை
பண பரிவர்த்தனை சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, பண பரிவர்த்தனை சட்டத்தின் 02 வது பிரிவின் விதிகளை மீறி, சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட முதலீட்டு நிறுவனங்கள் வைப்புகளை ஏற்றுக்கொள்கின்றதா அல்லது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனவா என்பது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
