எங்களால் எதுவும் செய்ய முடியாது! எரிபொருள் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கான அவசர அறிவிப்பு
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொது மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ கூறுகையில், எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும், இன்றைய தினத்திலிருந்து QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது.
பிரச்சினைகள்
QR குறியீடு தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாருங்கள்.

கடந்த சில தினங்களில் QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க சில சலுகைகளை வழங்கியிருந்தோம். ஆனால், இனிமேல் QR குறியீட்டிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும்.
அவசரத் தேவை ஏற்பட்டாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறொருவரின் வாகனத்தில் செல்லுமாறே கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
You may like this..
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri