உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் பெற்றோருக்கான கொடுப்பனவு
தாய்நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் பெற்றோருக்கும், இலங்கையின் அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக கடமையின் போது தியாகம் செய்த போர் வீரர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் முக்டகிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபையின் பெற்றோர் பராமரிப்புப் பிரிவு, குறித்த “பெற்றோர் பராமரிப்பு கொடுப்பனவை” வழங்கவுள்ளது.
பராமரிப்பு கொடுப்பனவு
இந்த கொடுப்பனவின் கீழ், தகுதியுள்ள பெற்றோருக்கு மாதாந்திர ரூ. 750.00 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவித்தொகை பெறும் பெற்றோர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த, தொடர்புடைய சான்றிதழ்களை வருடத்திற்கு ஒரு முறை ரணவிரு சேவா அதிகாரசபையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழை பெற்றோர் வசிக்கும் கிராம சேவைப் பிரிவின் கிராம சேவகர் அலுவலரால் சான்றளிக்கப்பட்டு, நடப்பு ஆண்டின் நவம்பர் முதல் திகதியிலிருந்து அடுத்த ஆண்டு பெப்ரவரி (28) வரை நான்கு மாதங்களுக்குள் ரணவிரு சேவா அதிகாரசபைக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய அறிவிப்பு
தற்போது, தகுதியுள்ள 32,867 பயனாளிகளில், சுமார் 17,000 பயனாளிகள் மட்டுமே சான்றிதழை முறையாக வழங்கியுள்ளனர். மீதமுள்ள பயனாளிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்காததால், அவர்களின் மாதாந்திர கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியுள்ளது.

ஏற்கனவே பயோடேட்டா சான்றிதழை வழங்காத போர் வீரர்களின் பெற்றோர்கள் பயோடேட்டா சான்றிதழை உடனடியாக வழங்கவும், அவர்களின் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் ரணவிரு சேவா அதிகாரசபை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது உதவித்தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கான ஒரு சட்டப்பூர்வ கடமையாகும், மேலும் தாமதம் ஏற்பட்டால் நிலுவைத் தொகை இழக்க நேரிடும் என்று ரணவிரு சேவா அதிகாரசபை தெரிவித்துள்ளது.