யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காணரமாக பெற்றுக்கொள்வதில் உள்ள வரையறைகளால் போக்குவரத்து துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், யாழ் மாவட்ட போக்குவரத்து திணைக்களமும் சேவை பெறுநர்களின் தேவை கருதி திங்கள்,செவ்வாய், மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என்பதுடன், குறிப்பிட்ட நாட்களில் சேவை பெறுநர்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.