ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
ஜேர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதையும், இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதையும் எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி ஜேர்மன் குடியுரிமை பெற காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இப்போது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள் உண்டு முதலாவதாக, பெரும்பாலானவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பதோடு ஜேர்மன் மொழித்திறனில் B1 மட்டத்தில் தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.
அடுத்தபடியாக, ஜேர்மனியில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஜேர்மன் மொழித்திறனில் B2 மட்டம் அல்லது அதைவிட அதிக தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.
புதிய சட்டத்தின் நிபந்தனைகள்
ஆனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்து அவர்கள் B1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் C1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் விண்ணப்பிக்க காத்திருப்போர் தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொண்டு சட்டம் நிவைவேறும் காலம் வரை மொழித்திறனை வளர்த்துக்கொள்வது சிறந்த யோசனையாக முன்வைக்கப்படுவதோடு சட்டம் நிறைவேறியதும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
