எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கியுள்ளார்.
அதன்படி நெருக்கடிகளை சமாளிப்பதற்கு மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், வாகனங்களுக்கு தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் பாவனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. நெருக்கடிகளை சமாளிப்பதற்கு மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
வாகனங்களுக்கு தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஏனையவர்களுக்கும் தேவையான அளவு எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும்
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அந்நிய செலாவணி பிரச்சினையே காரணம் என்பதால் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி ஏற்படும்.
அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் மட்டும் பொறுப்பேற்க முடியாது. நாட்டு மக்கள் வரிசையில் காத்திருந்ததற்கு அனைத்து அமைச்சர்களும் பொறுப்பு.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
May you like this Video

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
