ரணிலிடம் சென்றவர்கள் தொடர்பில் மனம் திறக்கும் மகிந்த!
தன்னைக் கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தச் சென்றவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுடன் கண்டி தலதா மாளிகையில் தரிசனம் செய்து மகா நாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை விட்டுச் சென்றவர்கள்
எந்தவொரு தேர்தலும் சவாலானது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாமல் ராஜபக்ச வெற்றியீட்டுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு மகிந்த ராஜபக்ச சிரித்துக் கொண்டே , “எனக்கு அருகில் ஒரு சலூன் கதவு உள்ளது. நீங்கள் செல்லலாம். நீங்கள் வரலாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் ” எனவும் பதிலளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam