விசாவிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிரந்தரத் தடை விதிக்கப்படலாமென எச்சரிக்கை
அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பில் மேலும்,
சிறிய குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா மறுப்புக்கு வழிவகுக்கும். தூதரக அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி விபரங்கள் இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையை மட்டுமே வழங்க வேண்டும்
அத்துடன் விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழுமையான உண்மையை மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களை அளித்தால் எதிர்காலப் பயணங்கள் நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Criminal convictions can permanently bar you from entering the United States. Even minor offenses can trigger visa denials. Consular officers have access to your criminal background and will discover past violations or arrests. Tell the truth on your application and in your… pic.twitter.com/wpDQdIFLEn
— U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) July 22, 2026