பணம் திரட்டும் இலங்கை அரசு: ஜனாதிபதி ஆலோசகர் வெளியிட்ட தகவல்
அமைச்சுச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும், முதிர்ச்சியடையும் திறைசேரி கொடுப்பனவுகள் மற்றும் பத்திரங்களை மீளச் செலுத்துவதற்கும் உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து நிதி திரட்டுவது அசாதாரணமான செயல் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் அனில் ஜயந்த இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அன்றாட அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டவும் அதன் சேவைகளை தொடரவும் நிதி தேவைப்படுகிறது.
சாதாரண நிதி சேகரிப்பு
எனவே, திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொரு வாரமும் மத்திய வங்கி நிதி திரட்டுகிறது என்று ஜயந்த கூறியுள்ளார்.

நடப்பது சாதாரண நிதி சேகரிப்பு தான். அது தவிர, உள்நாட்டு நிதிச் சந்தையில் இருந்து சிறப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான நிதி திரட்டல் எதுவும் இல்லை என்றும் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜயந்தவின் இந்த கருத்துக்கள், புதிய அரசாங்கம் சர்வதேச சந்தைகளில் இருந்து கடன்களை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டும் அறிக்கைகளை தொடர்ந்தே வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam