ஐக்கிய தேசிய கட்சியினரும் மொட்டுக் கட்சியினரும் தேர்தலுக்குத் தயார் இல்லை: சிறிநேசன்
ஐக்கிய தேசிய கட்சியினரும் மொட்டுக் கட்சியினரும் தேர்தலுக்குத் தயார் இல்லை எனும் விடயம் வெளியாகியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுவதாக ஜி. சிறிநேசன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (05.03.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
வடபகுதி தமிழ் மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உள்நாட்டுப் பொறி முறையை
விரும்புகின்றார்கள் என அர்த்தமில்லாத கருத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியிருக்கின்றது எனவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri
