அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிணை வழங்கியுள்ளது.
தலா ரூ.500,000 மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களிலும், ரூ.10,000 ரொக்கப் பிணையிலும் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக
2020 பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக, 'அபே ஜன பல' கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ரத்தன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அத்துரலியே ரதன தேரரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தது.
இந்தநிலையில், சந்தேகநபரான அத்துரலியே ரத்ன தேரர், கடந்த 29ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து இன்று (12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan