மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் இன்னும் இரண்டரை மாதங்கள் வரையான காலப்பகுதிக்கு முழுவீச்சில் செயற்பட முடியாத தடங்கலை எதிர் கொண்டுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை முழு கொள்ளளவுடன் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க இன்னும் 75 நாட்கள் ஆகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “எரிபொருளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவு எரிபொருள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.
மேலும், மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது ஜெனரேட்டர் கட்டாய பராமரிப்புக்காக கடந்த சனிக்கிழமை நிறுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
1995 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையினால் (CEB) நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டது. கட்டுமானம் 2007 இல் தொடங்கி மூன்று கட்டங்களாக முடிக்கப்பட்டு செப்டம்பர் 2014 இல் நிறைவடைந்துள்ளது.
இதன் மொத்த மின் உற்பத்தி 900 மெகாவால்ட் ஆகும். எவ்வாறாயினும் இந்த ஆலை அடிக்கடி மூடப்படுவதால் நாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
(CMEC) அனல் மின் நிலையத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட தடவைகள் பழுதடைந்துள்ளதாகவும், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு பாரியளவானது என்றும் கூறப்படுகிறது.
மின்சார சபை அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 2010 இல் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு நிலக்கரி எரித்த பின் கழிவுகளை வெளியேற்றும் புகைபோக்கியில் ஏற்பட்ட அடைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தீ விபத்து கட்டுமானப் பணிகளைச் சீர்குலைக்கவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறையவில்லை.
மீண்டும் ஜூலை 22, 2012 அன்று, கொதிகலன்களுக்கு இடையே தண்ணீர் செல்லும் ஆயிரக்கணக்கான குழாய்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.
மற்றொரு சந்தர்ப்பத்தில், ஜனவரி 29, 2013 அன்று, மின் உற்பத்தி நிலையம் அதன் திட்டமிடப்பட்ட 300 மெகாவால்ட் அளவைத் தாண்டியது, இதனால் மின் உற்பத்தி நிலையம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 12, 2014 அன்று, ஆலையில் நீராவி கசிவு கண்டறியப்பட்டு மின் உற்பத்தி நிலையம் ஆறு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கப்பட்ட ஒரு நாள் கழித்து, பழுதுபார்க்கப்பட்ட மின்தேக்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி நிலையம் 26-வது முறையாக மூடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
செலவு
கடந்த 24 நாட்களில் நான்கு முறை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மூடப்படுவதால் மாற்று டீசல் எரிசக்தியை கொள்வனவு செய்வதற்கு மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 3.3 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையம் மீண்டும் முழு வீச்சில் செயற்பட இரண்டரை மாதங்கள் வரையான காலபகுதியை தாண்டும் என்று கூறப்படுகின்றது. அதுவரை மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது“. என அவர் தெரிவித்துள்ளார்.