கல்வி அமைச்சின் அறிவிப்பினை ஏற்கப் போவதில்லை! ஆசிரிய தொழிற்சங்கங்கள்
கல்வி அமைச்சின் அறிவிப்பினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாளைய தினம் முதல் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமைக்கு திரும்ப வேண்டுமென சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அதிபர்களும், ஆசிரியர்களும் நாளை கடமைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளன.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது கடமைக்கு திரும்புமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளன.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan