வடக்கு கடற்தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குழப்புபவர் டக்ளஸ்தான்: அன்னலிங்கம் அன்னராசா
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுயநலத்துக்காக வடக்கு கடற்தொழிலாளர்களை பிரித்தாளுகின்றார் என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் (05.03.2023) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலே மாறி மாறி பல இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.
ஒரு சம்பவத்தை மறைப்பதற்காக இன்னுமொரு சம்பவத்தை அரசாங்கமே உருவாக்குகின்றது.
ஜனாதிபதியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கோரி கடிதம்
வடக்கில் உள்ள தமிழ் அமைச்சர் மேல் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் எம்மைப் பிரித்துதான் நினைத்தவற்றை சாதிக்கத் துடிக்கின்றார்.
இதனாலேயே நாம் நேரடியாக ஜனாதிபதியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.
வடக்கில் உள்ள 50000 கடற்றொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினைக்கும் ஓர்
அடித்தளமாக இந்தச் சந்திப்பு அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
