வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

Climate Change West Bengal Northern Province of Sri Lanka Weather
By Independent Writer Nov 28, 2024 05:44 AM GMT
Independent Writer

Independent Writer

in இயற்கை
Report

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 1823 குடும்பங்களை சேர்ந்த 6301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 69 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தில் அடித்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர்

வட்டுவாகல் பாலத்தில் அடித்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய நபர்

வவுனியா 

நேற்று (27.11) மாலை வரை இடம்பெற்ற பாதிப்புகளை அடிப்படையாக கொண்டே பாதிக்கப்பட்டோரின் தகவல்களை  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது.

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் | Northern Province Weather Today

இதற்கமைய தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெள்ள நீர் வழிந்தோடாமையால் பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 775 குடும்பங்களைச் சேர்ந்த 2709 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 11 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 11 குளங்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், ஏ9 வீதி உட்பட சில வீதிப் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

யாழ்ப்பாணம்

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் (Jaffna)  பெய்த தொடர் மழையால் அனைத்து இடங்களிலும் வெள்ளம் வழிந்தோடாமல் காணப்படும் நிலை காணப்படுகின்றது.

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் | Northern Province Weather Today

யாழ் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உதயபுரம் கிராமத்தில் வாழும் 200-க்கும் மேற்பட்ட கடல் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் மழை வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த ஒரு சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இக்கிராமத்தில் வாழும் கடல் தொழிலாளர்கள் கடல் தொழிலுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இக்கிராம மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.    

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் | Northern Province Weather Today

தென்மராட்சி பிரதேசம்

யாழ்.குடாநாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தென்மராட்சி பிரதேசத்தின் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை, கச்சாய், கைதடி, நாவற்குழி, தச்சன்தோப்பு மற்றும் தனங்களப்பு நெல் வயல் நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன.

மேலும், குடியிருப்புகளில் வெள்ளம் உட்புகுந்துள்ளது. வெள்ளத்தால், சரசாலை, மட்டுவில், மிருசுவில், கொடிகாமம், அல்லாரை, கைதடி, நாவற்குழி ஆகிய பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சந்நிதியான் ஆச்சிரம உதவி

வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் -சங்கிலியன் தோப்பு, மற்றும் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் 350  பேருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சமைத்த உணவுப் பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் | Northern Province Weather Today

இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.

மன்னார்

மன்னார் (Mannar)  மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை (27) மாலை 6 மணி வரை 16 ஆயிரத்து 774 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 674 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு (DMC) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் | Northern Province Weather Today

மேலும் மாவட்டத்தில் 73 தாற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களில் 2 ஆயிரத்து 845 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 156 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

முல்லலைத்தீவு

முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டு கூரைக்கு மேல் விழுந்ததால் வீட்டு மேற்பக்க கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை 1ஆம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்றையதினம் அதிகாலை வீட்டின் பெரிய  மரம் முறித்து விழுந்துள்ளது.

அதனையடுத்து வீட்டின் மேற்பக்க கூரை முற்றுமுழுதாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தின்போது வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படகிறது.

இளங்குமரன் கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடனும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனும்  கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்,

வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் | Northern Province Weather Today

"தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு வடிகால்கள் சிறந்த நிலையில் இல்லாமைதான் காரணமாகும்.

நாம் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களைப் புத்திஜீவிகளுடன் நேரடியாகச் சென்று ஆராய்ந்து வருகின்றோம்.

குறிப்பாக யாழ். நல்லூர் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் முறையான வடிகாலமைப்புக் கட்டமைப்புச் செயற்பாடுகள் இல்லாமையால்தான் அந்தப் பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. - என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US