ரணிலின் முன்னிலையில் யாழில் கதிரைச் சண்டையில் ஈடுபட்ட வடக்கு ஆளுநர்
வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநரும், முன்னாள் ஆளுநரும் கதிரைச் சண்டையில் ஈடுபட்டமை அரசாங்க உயரதிகாரிகளை முகஞ்சுழிக்க வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவுக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வட மாகாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென மாவட்ட செயலகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்காக நல்லூரில் பொங்கல் விழாவை முடித்துக் கொண்டு கச்சேரிக்குச் சென்ற ஜனாதிபதியுடன், கல்வி இராஜங்க அமைச்சரும், முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவனும் வந்திருந்தார்.
ஆசன பிரச்சினை
அந்த கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அருகில், இராஜாங்க அமைச்சருக்கும் ஆசனம் போடப்பட்டு, அவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், அவர் அந்த இடத்துக்கு வருவதற்கு முன்னரே அங்கு வந்திருந்த தற்போதைய ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கல்வி இராஜாங்க அமைச்சரின் பெயர் ஒட்டப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்துள்ளார்.
முரண்பாடு
ஜனாதிபதியுடன் வந்து தனது இருக்கையைத் தேடிய கல்வி இராஜங்க அமைச்சருக்கு அவரது கதிரையை விட்டுக் கொடுக்காமல், தற்போதைய ஆளுநர் முரண்பட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட கொழும்பைச் சேர்ந்த அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அதிகாரிகளும் ஒருவரையொருவர் பார்த்து முகஞ்சுழித்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
