மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்த முயற்சி! வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு
13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்கு சில தனிநபர்கள் முயற்சிப்பதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தவறான பாதையில் சித்தரிக்கப்படும் மாகாண அதிகாரங்கள்
அதில் மேலும், மாகாணசபை முறைமையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என பல மாகாணங்கள் போராடும் நிலையில் உரத்த குரலில் பேசும் சிலரின் செயற்பாடுகள் மாகாண அதிகாரங்களை தவறான பாதையில் சித்தரிப்பதாக அமைகிறது.

வட மாகாண அபிவிருத்திக்காக பெருநகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து 25இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மாகாணத்தில் பணியாற்றியுள்ளன.
மேலும் மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வே நாட்டின் மாகாண ஓய்வூதிய திட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பில் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| அதிகாரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இடமாற்றம் வழங்கப்படாது: வட மாகாண ஆளுநர் |
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam