இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுக்க வேண்டும் என்பதனையே வடபகுதி மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர் : என்.எம்.ஆலம் (Video)

Srilanka Protest Arrest Fishermen Douglas Devananda
By Ashik Dec 23, 2021 02:47 PM GMT
Report

நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள் சீன தூதுவர் வருகைக்கு இடம் பெற்றுள்ள நிலையில் சீனத் தூதுவரின் வருகை எதனைக் குறிக்கின்றது? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (23) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விடயம் இலங்கையை விட இந்தியாவில் பிரபலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பாகவும் அவர்களின் படகுகள் தொடர்பாகவும் இந்தியாவில் விவாதங்களும், தலைவர்களின் கண்மூடித்தனமான பேச்சுக்களையும் ஊடகங்கள் ஊடாக பார்த்து வருகிறோம்.

எல்லை தாண்டி எமது இறைமையை மீறி எமது நாட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த பல நூற்றுக்கணக்கான படகுகளில் சுமார் 10 படகுகள் மட்டுமே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த படகுகளிலிருந்த 63 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த படகுகளின் எண்ணிக்கை 500 இற்கும் அதிகம். இந்திய மீனவர்கள் இல்லது இந்தியாவில் உள்ள மக்கள் எல்லை தாண்டும் போது இலங்கை எல்லை என்பது இந்தியாவிற்குச் சொந்தம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

பாகிஸ்தான் அல்லது சீனாவின் எல்லையை இவர்களினால் தாண்ட முடியுமா? சட்ட விரோதமான தொழிலைச் செய்து கொண்டு அதை நியாயப்படுத்தி அதனை மக்கள் அவையிலும், நாடாளுமன்றத்திலும் தலைவர்கள் வாதாடுவது என்ன வகையில் பொருத்தமானது என்பது எமக்கு தெரியவில்லை.

ஒரு இறைமையுள்ள நாட்டின் மீது அத்துமீறி அந்த நாட்டிற்குள் சென்று இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனை அவர்களும் கண்டித்திருக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.

கைது செய்யப்பட்ட இந்திய இழுவைப்படகுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மீன்களைப் பார்க்கின்ற போது அதில் சிறு மீன்கள் உட்பட ஏனைய கடல் உயிரினங்கள் அழிக்கப்படுவதை அவதானித்ததாகக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.நாங்கள் இப்போது அல்ல பல வருடங்களுக்கு முன்பு இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். இந்திய இழுவைப்படகுகளும்,, உள்ளூர் இழுவைப்படகுகளும், மேற்கொள்கின்ற இந்த தொழில் முறையினால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றது.

முற்றிலும் கடல் வளத்தை அழிக்கும் நோக்குடன் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத கைது நடவடிக்கைகள் அண்மையில் வருகை தந்த சீன தூதுவர் வருகைக்குப் பின்னரே இந்த கைது இடம் பெற்றுள்ளது.

அவரின் வருகை எதைக் குறிக்கின்றது? என்று தெரியவில்லை. இந்திய மீனவர்களைக் கைது செய்து பின்னர் அவர்களை விடுதலை செய்து இந்தியாவைச் சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கையா?அல்லது மீனவர்களைக் கைது செய்து சீனா வை சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கையா? அல்லது கைதின் மூலம் வட பகுதி மீனவர்களுக்கு என்ன செய்தியை இந்த அரசு கூற விரும்புகிறது.

இக் கைதுகளுக்கான உண்மை நிலை எதிர் காலத்தில் தெரிய வரும். இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும் என்பதனையே வட பகுதி மீனவர்கள் எதிர் பார்க்கின்றனர்.

இந்திய மீனவர்களின் சட்டவிரோத தொழில் நடவடிக்கையைத் தடுத்தால் எமது மீனவர்களும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை நிறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய மீனவர்களின் வருகை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.அவ்வாறு அத்துமீறி வருகின்றவர் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மேலும் அண்மையில் வருகை தந்த சீனத் தூதுவர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். வருகை தந்த சீன தூதுவர் சில அமைப்புகளை அழைத்து அவர்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதில் மீனவர் சார்ந்த எந்த அமைப்புக்களும் கலந்து கொள்ளவில்லை. கடற்றொழில் திணைக்களமும் சம்மந்தப்படாத வேளையில் வெறுமனே வெளிநாட்டுத் தூதுவர் வருகை தந்து இவ்வாறான பொருட்களை மீனவர்களுக்கு வழங்கியதன் காரணம் என்ன? என்று இன்று வரை தெரியாத புதிராக உள்ளது.

குறித்த பொதி உலர் உணவாகக் காணப்படுகின்றது.மன்னார் மாவட்டத்திற்கு 600 பொதிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகின்றது. சீனத் தூதுவர் எதை எதிர்பார்த்து எமது மீனவர்களுக்கு வழங்குகிறார் என்று தெரியவில்லை.மன்னார் மாவட்டத்தில் 40 மீனவ சங்கங்கள் பதிவில் உள்ளது. 600 பொதிகளை எவ்வாறு பங்கிட்டு வழங்குவது? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மன்னார் மாவட்ட பிரதேச மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் ஜே.யோகராஜ் குரூஸ் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US