வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை (P.S.M. Charles) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பானது, இன்று(24.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ககாதார பணிப்பாளருடன் உரையாடிய ஆளுநர், " கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்கள்.
ஆலோசனைகள்
மேலும், நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும்.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதாரசேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுங்கள்"என ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |