வட மாகாண மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள வடக்கு ஆளுநர்
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டமை எமது மாகாண மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது முக்கியமான மைல்கல், இதற்காக எமது மாகாண மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் வட மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (21.06.2025) நடைபெற்றது.
மிகப்பெரிய வரப்பிரசாதம்
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பிரதேச செயலராக பணியாற்றிய போர்க்காலத்தில் - 1991ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் - மக்கள் மருத்துவத் தேவைக்காக கொழும்புக்கு அலைய வேண்டும்.
அதுவும் இதற்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். இந்த அலைச்சல் வீண் செலவுகள் எல்லாம் இப்போது இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. இது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அரச சேவை என்பது மக்களுக்கு விரைவாக கிடைக்கப்பெற வேண்டியது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அது மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது. மக்கள் தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விரைவாக தமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள்
தனித்து மருத்துவ தேவைக்காக மாத்திரமல்லாது, ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் வடக்கு மாகாண மக்கள் இன்றிலிருந்து பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடியதாக அரச சேவையை மாற்றியமைக்க வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்.
அது உண்மை. இன்று மக்கள் மத்தியில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இன்று ஆரம்பிக்கப்படும் இந்தச் சேவைகள் ஊடாக அதை மாற்றியமைப்பதற்கு அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 20 மணி நேரம் முன்

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
