சர்வதேசத்துக்கு அஞ்சாத வடகொரியா! 5வது ஏவுகணையையும் சோதனை செய்தது
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா தொற்று காரணமாக வடகொரியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அந்த நாடு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து 2 குரூஸ் ரக ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
இது, வடகொரியா இந்த மாதத்தில் மாத்திரம் நடத்திய 5-வது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.