மலையகத் தமிழ் உறவுகளுக்கு வடக்கு- கிழக்கு துணை நிற்கும்! சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

Sri Lanka Upcountry People Suresh Premachandran Northern Province of Sri Lanka Floods In Sri Lanka Cyclone Ditwah
By Rakesh Dec 13, 2025 03:54 PM GMT
Report

வடக்கு - கிழக்கு என்றும் மலையகத் தமிழர்களுக்குத் துணை நிற்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு, அண்மையில் முழு நாட்டையும் புறட்டிப் போட்ட டித்வா சூறாவளி, மலையகத்தை வழக்கம் போலவே சூறையாடிச் சென்றுள்ளது.

நாளைய விடியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கனவுகளுடனும் இருந்த ஏராளமானோரை நொடிப்பொழுதில் காவுகொண்டு மண்ணுக்கடியில் புதைத்தது. உறவுகள் இருக்கின்றார்களா? அவர்கள் நலமுடன் இருப்பார்களா என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் நிலைக்கும் இயற்கை அந்த மக்களை வஞ்சித்துள்ளது.

இலங்கையில் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சாபக்கேடு! நீதிமன்றம்

இலங்கையில் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சாபக்கேடு! நீதிமன்றம்

டித்வா சூறாவளி

இலங்கையில் தமிழனாக இருப்பவர்கள் அனைவரும் துன்பப்படத்தான் வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு இம்முறை மலையகத் தமிழர்களையும் வடக்கு - கிழக்கு தமிழர்களையும் டித்வா புரட்டிப் போட்டுள்ளது.

இந்த டித்வா சூறாவளியால் மலையகத்தில் எழுநூறுக்கும் மேலான மக்கள் நிலச்சரிவுகளில் அகப்பட்டு மண்ணுக்குள் புதையுண்டு இறந்துள்ளனர். முன்னரும்கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் இப்பொழுது இது மிகவும் பாரதூரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையகத் தமிழ் உறவுகளுக்கு வடக்கு- கிழக்கு துணை நிற்கும்! சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு | North East Will Support Hilly Tamil Relations

இலங்கைக்குப் பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட உறவுகள் 250 வருடங்களாக சொந்த நிலமின்றி, சொந்த வீடின்றி, அல்லலுறும் நிலையையே இதுவரை நாங்கள் பார்த்து வருகின்றோம்.

இலங்கையில் அவ்வப்போது ஏற்படும் இனப்படுகொலைகளின்பொழுது மலையகத் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு புகலிடம் தேடி வடக்கு - கிழக்கில் குடியேறியுள்ளனர்.

1977, 1981 மற்றும் 1983 காலப்பகுதிகளில் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு - கிழக்கில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறியுள்ளனர்.

அவர்கள் இன்று தங்களுக்கான காணிகளுடனும் வீடுகளுடனும் இருப்பதுடன் கல்வியிலும் மேம்பட்டு தம்மைத் தாமே கவனித்துக்கொள்ளக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்துள்ளனர்.

நிவாரணங்களை வழங்க கோரி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

நிவாரணங்களை வழங்க கோரி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

அரசாங்கம்

இலங்கை சுதந்திரமடைந்த உடன் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தினூடாக, ஒருபகுதி மக்கள் இந்தியா சென்றுவிட மறுபகுதியினர் இலங்கையில் தங்கினர்.

அவ்வாறு இலங்கையில் இருந்தவர்களுக்குக்கூட முழுமையான வாக்குரிமை மற்றும் குடியுரிமையைக் கொடுக்க இலங்கை அரசுகள் மறுதலித்தே வந்தன.

மலையகத் தமிழ் உறவுகளுக்கு வடக்கு- கிழக்கு துணை நிற்கும்! சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு | North East Will Support Hilly Tamil Relations

1985ஆம் ஆண்டு, இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நடைபெற்ற திம்பு பேச்சின்போது, தமிழர் தரப்பினர் நான்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தனர். அதில் ஒன்று இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மலையகத் தமிழ் மக்களுக்கும் வாக்குரிமை, குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இதன் பின்னர், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் பேசி, அம்மக்களுக்கான வாக்குரிமை, குடியுரிமை என்பன வழங்கப்பட்டன. ஆனால், இன்றும் அவர்களில் பெரும்பாலானோர் காணி உரிமை அற்றவர்களாகவும் எவ்வித முன்னேற்றமும் அற்றவர்களாகவும் தேயிலைத் தோட்டத்தின் லயன்களில் வசிப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் இயற்கை அனர்த்தங்களால் அந்த மக்கள் தொடர்ச்சியாக தமது உயிரை அர்ப்பணித்து வருவதானது, ஏற்புடைய விடயமல்ல.

ஆகவே, எமது பெருந்தோட்ட உறவுகளுக்கு இலங்கை அரசாங்கம், மலையகத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களை வழங்கி, இயற்கை அனர்த்தத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் வடக்கு - கிழக்கில் அந்த மக்கள் குடியேறி வாழ விரும்புகின்ற சூழ்நிலையில், அதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கத் தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.

மலையக மக்களுக்கு கிழக்கில் இடமில்லை!விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மலையக மக்களுக்கு கிழக்கில் இடமில்லை!விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புலம்பெயர்தல்

முன்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களின்பொழுதும் வடக்கு - கிழக்குக்குத் துறத்தப்பட்ட எமது உறவுகளை வரவேற்று உபசரித்து அவர்கள் அச்சமின்றி வாழக்கூடிய அடிப்படையில் காணிகளை வழங்கி, தேவையான உதவிகள் செய்யப்பட்டு, அவர்கள் மனிதர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.

அரசு எவ்வித உதவியையும் செய்யாமலேயே தமிழ்த் தொண்டு நிறுவனங்களும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

[WY3IBI]

மலையக உறவுகள் வடக்கு - கிழக்கில் குடியேற விரும்பும் பட்சத்தில் புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் காணிகளை மட்டுமன்றி, அவர்களின் தேவையின் அடிப்படையில் காணிகளை வழங்கி, அவர்கள் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தமிழ் தரப்புகள் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பும் மகத்துவமானது. மலையக மக்கள் வடக்கு - கிழக்கில் குடியேறுவது புதியதுமல்ல. அவர்களுக்கு இந்தப் பிரதேசம் அந்நியமானதுமல்ல.

இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகளின் காரணமாகவே மலையக மக்கள் புலம்பெயர்ந்து வடக்கு - கிழக்குக்கு வந்தார்கள். போர் காரணமாக வடக்கு - கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.

, புலம்பெயர்தல் என்பது வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் நடைபெற்றுக்கொண்டே வந்துள்ளது. இப்பொழுது இயற்கை அனர்த்தம் அவர்களைப் புலம்பெயரச் செய்துள்ளது. அவர்களுக்கான வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் உருவாக்க அரசு தவறினால் அவர்களை அரவணைத்துப் பாதுகாப்பதில் வடக்கு - கிழக்கு முன்னிற்கும்." - என்றுள்ளது.

பாலமீன்மடு பிரதேசத்தில் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு! திடீரென கைவிடப்பட்ட போராட்டம்

பாலமீன்மடு பிரதேசத்தில் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு! திடீரென கைவிடப்பட்ட போராட்டம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US