பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் பரிந்துரை
நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச டுவிட்டர் பதிவொன்றையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் தேர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளரான திருமதி ரோஹினி கவிரத்னவின் பெயர் எமது கட்சியால் முன்மொழியப்படும்.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 14, 2022
பிரதி சபாநாயகர் தேர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளரான ரோஹினி கவிரத்னவின் பெயர் எமது கட்சியால் முன்மொழியப்படும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan