அமெரிக்க மாகாண ஆளுநராக ஆசியப் பெண் அருணா மில்லர் நியமனம்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை ஆளுநராக ஆசியப் பிராந்தியத்தில் இருந்து, இந்திய பெண் அருணா மில்லர் என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர் தந்தையின் பணிநிமித்தம் காரணமாக பெற்றோருடன் சென்று அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மேரிலாண்ட் மாகாண துணை நிலை ஆளுநர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய தினம் பதவியேற்றுள்ளார்.
மேரிலாண்ட் மாகாணத்தின் துணை நிலை ஆளுநரான முதல் இந்தியர், முதல் பெண், முதல் கறுப்பினத்தவர் ஆகிய பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
