கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமருக்கான பெயர்கள் பரிந்துரை
இலங்கையின் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் உடன்படிக்கையை தயாரித்து வருவதாக ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த வகையில்,சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வு
இதற்கமைய, இடைக்கால அரசை அமைப்பதா அல்லது வேறு ஆட்சி முறையை அமைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
எனினும், அந்த நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வருவதாகவும், புதிய அரசை நடத்துவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
