நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, இன்று (07.10.2024) திங்கட்கிழமை பிற்பகல் வரை ஒரேயொரு சுயேட்சைக் குழுவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 08 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக மாவட்டத் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கால எல்லை
கடந்த 04ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கும் பணி ஆரம்பமாகியது. வார விடுமுறை முடிந்து மீண்டும் இன்று காலை 8.00 மணிக்கு மீண்டும் குறித்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை அலுவலக நாட்களில் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
