வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பல் இல்லை: ஆளுநர் வெளிப்படை
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மாத்திரமே, மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் சீரான பரம்பல் இல்லை என ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட காணி ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“காணி அணுகல்கள் ஏழை மக்களுக்கு மறுக்கப்படுவதோடு வசதிபடைத்தோர் வசமே அவை செல்கின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
சீரான பரம்பல் இன்மை
இடமாற்றங்கள் வழங்கப்படும்போது தான் பல அரச உத்தியோகத்தர்களுக்கு நோய் நிலைமை இருக்கின்றதே தெரியவருகின்றது.
அவர்கள் தான் தங்கள் பெற்றோர்களை கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவருகின்றது. இடமாற்றங்களை நிறுத்துவதற்காக இவ்வாறு அரச அதிகாரிகள் தெரிவிக்கக்கூடாது.
வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பல் இன்மையால், யாழ். மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களில் பணியாற்றுவது கட்டாயம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
