நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் நல்ல வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
டேன் பிரியசாத் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு அதிகரித்துச் செல்வதாகவும் குறைவடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இந்த அதிகரிப்பினை பார்த்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரனஜயபுர படைவீரர் கிராமத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும் என பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
