அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை - ஈரான் திட்டவட்டம்
நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
ஈரான் தன்னிடம் "பேச்சுவார்த்தை" நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கருத்துகளுக்கு முரணாக இவரது இந்த அறிக்கை அமைந்துள்ளது.
பதிலடி கொடுக்கும் விதமாக
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் 40 உயர் ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்களை ஈரான் தொடர்ந்து தாக்குகிறது.

இந்த தாக்குதல்களில் பஹ்ரைனில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் அமெரிக்க துருப்புக்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ஈராக்கிய ஷியைட் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
இது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: லெபனானிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - ஆரம்பித்துள்ள தாக்குதல்