ரணில் விக்ரமசிங்கவின் சதி வேலைகளில் சிக்கப்போவதில்லை:தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரையில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படாது என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நிதி இல்லை என கூறும் ஜனாதிபதி, அரசாங்க சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு தரப்பிற்கு மட்டும் கொடுப்பனவு வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியை குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்க சேவையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சதி வேலை
எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சதி வேலைகளில் சிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரையில் வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுக்காதிருப்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க பிரிவு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவாகும் வரையில் வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
