மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: அரசாங்கம் உறுதி
அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று, பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
நாட்டில் தற்போது மருந்துப் பற்றாக்குறை நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன என்றும், அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
விரிவான நடவடிக்கைகள்
இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த இடையூறுகள் புதியவை அல்ல, அவை பல ஆண்டுகளாக உள்ளன," என்று அவர் கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டிற்குள் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க தற்போது விரிவான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri