மனித வெடிகுண்டாக மாறவும் தயங்க மாட்டோம்! மீனவர்கள் கடுமையான எச்சரிக்கை
இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்தவொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
‘‘அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
அது மாத்திரமின்றி எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் நாங்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி எங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வோம்‘‘ என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்.




அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
