ஒன்றாக பயணித்தால் எங்களை யாரும் பிடித்திழுக்க முடியாது! - ஜனாதிபதியிடம் கூறிய அமைச்சர் விமல்
இந்த அரசைப் பாதுகாக்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதியும் நீண்ட நேரம் பேசியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. “அரசாங்கத்தின் பாதை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக பேசியுள்ளார்.
அத்துடன், கோவிட் தொற்றுநோய் எதிர்பாராத விதமாக பரவியமை பற்றியும், அரசாங்கம் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் கூட்டாக செயற்பட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்,
“நாங்களும் தவறுகள் செய்திருக்கலாம். எனினும், அவற்றை சரிசெய்வோம். நாம் அனைவரும் இந்த பயணத்தில் கூட்டாகச் சென்றால், எங்களை யாரும் பிடித்து இழுக்க முடியாது.
இது நாம் அனைவரும் உருவாக்கிய அரசாங்கம்.
எனவே, இந்த அரசைப் பாதுகாக்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்.” என ஜனாதிபதியிடம் கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
